Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருப்பூர் அ.தி.மு.க., சார்பில் மேடை கலைஞர்களுக்கு உதவி வழங்கல்

மே 13, 2020 09:38

திருப்பூர்: திருப்பூர் அ.தி.மு.க. மாநகர் மாவட்டம் சார்பில் 4 ஆயிரம் குடும்பங்களுக்கு நிவாரணமாக அரிசி பைகள் வழங்கப்பட்டது.

ஊரடங்கு உத்தரவு தளர்ந்த போதிலும் மேடை கலைஞர்கள் வேலையின்றி தவித்து வந்தனர். அவர்களின் வாழ்வாதாரத்தை காத்திடும் வகையில் திருப்பூர் மாநகர மாவட்ட அ.தி.மு.க. சார்பில் திருப்பூர் மாவட்ட அ.தி.மு.க. கட்சி அலுவலகத்தில் மேடை கலைஞர்கள் 500 நபர்களுக்கு இரண்டாம் கட்டமாக கொரோனா நிவாரணமாக அரிசி பைகளை திருப்பூர் மாநகர மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ஆனந்தன் வழங்கினார். மேலும் திருப்பூர் மாநகரில் உள்ள 7 வார்டுகளில் உள்ள 3,500 குடும்பங்களுக்கு அரிசிப் பைகளை வாகனம் மூலம் அனுப்பி வைத்தார்.

இந்நிகழ்வில் அம்மா பேரவை துணைச் செயலாளர் உஷா ரவிகுமார், பாசறை துணைத் செயலாளர் ஷாஜகான், பரமகுரு, நீதிராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். அனைவரும் சமூக இடைவெளி கடைபிடித்து தங்களது நிவாரண பொருட்களை பெற்றுச் சென்றனர்.

தலைப்புச்செய்திகள்